Rezultati pretraživanja
  1. திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்! தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்! பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா! கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா! 🐓🦚

  2. முருகனின் மறுபெயர் அழகு அந்த முறுவலில் மயங்குது உலகு! குளுமைக்கு அவனொரு நிலவு குமரா எனச்சொல்லிப் பழகு! வேதங்கள் கூறிடும் ஒளியே உயர் வேலோடு விளையாடும் எழிலே! 🐓🦚

  3. அடைக்கலம் நீயே வேலய்யா! அருகில் நின்று அருள்புரிவாய் குமரய்யா! அரோஹரா சுவாமியே வேலய்யா! அலையாய் வரம் தருவாய் கந்தய்யா! ஒப்பில்லா மாணிக்கமே வேலய்யா! ஓம் சக்தி ரூபனே குமரய்யா! சஷ்டி நாயகனே வேலய்யா! சடாச்சர மூர்த்தியே முருகய்யா! 🐓🦚

  4. ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே! ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே! கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே! குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே! மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே! 🐓🦚

  5. ஷண்முகநாதா ஷண்முகநாதா ஷண்முகநாதா சரணம்! சரவண பவனே சக்தியின் மகனே ஷண்முகநாதா சரணம்! முத்திரைப் பவுனே வித்தக அறிவே முத்தமிழ் அமுதே சரணம்! மூவிரு முகமே பூவிதழ் மனமே முடிமணி தொழுதோம் சரணம்! 🐓🦚

  6. ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னை தீர்க்கும் துன்பம் வாராதநிலை தன்னைச் சேர்க்கும் ஐயன் ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினை தன்னை தீர்க்கும்! 🐓🦚

  7. முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே உடல் பற்றிய பிணி ஆறுமே வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே! குமரனைக் கும்பிட்டு கொண்டாடுவோருக்கு குறைகள் யாவும் போகுமே அவர் குடும்பம் தழைத்தோங்குமே! 🐓🦚

  8. கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழனியிலே! மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்! மரகத வண்ணனாம் திருமால் மருகன்! விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தார்! வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தார்! 🐓🦚

  9. கற்பனையில் வருகின்ற சொற்பதமே அன்பு கருணையில் உருவான அற்புதமே! சிற்பச் சிலையாக நிற்பவனே வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே! உனைப் பாடும் தொழில் இன்றி வேறு இல்லை! எனை காக்க உனையின்றி யாருமில்லை! முருகா! 🐓🦚

  10. முருகன் என்றால் அழகன் என்று தமிழ்மொழிகூறும் அழகன் எந்தன் குமரன் என்று மனமொழிகூறும் உயிர் இனங்கள் ஒன்றை ஒன்று வாழ்த்திடும் போது அதன் உள்ளிருந்து வாழ்த்துவது உன் அருளன்றோ முருகா உள்ளமெல்லாம் உன்பெயரை சொல்லச்சொல்ல இனிக்குதடா முருகா! 🐓🦚

  11. 🙏 இன்று சஷ்டி விரதம் 🙏 வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தன் என்ற சொல்லக் கலங்கிடுமே செந்தில் நகர் சேவகா என்று திருநீறு அணிவார்க்கு மேவ வராதே வினை.

  12. 29. stu 2019.
  13. 10. stu 2019.

    🙏சஷ்டி நன்நாளில் சங்கரன்கோவிலில் சண்முகநாதனுக்கு ஆறுமுக தீபாராதனை🙏 நன்றி : Sankarankovil

Čini se da učitavanje traje već neko vrijeme.

Twitter je možda preopterećen ili ima kratkotrajnih poteškoća u radu. Pokušajte ponovno ili potražite dodatne informacije u odjeljku Status Twittera.